திருக்குறள்

195.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்.

திருக்குறள் 195

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்.

பொருள்:

நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.

மு.வரததாசனார் உரை:

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:

இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.