Skip to content
195

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்.

குறள் 195

Seermai Sirappotu Neengum Payanila Neermai Yutaiyaar Solin.

பொருள்

நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.

English

Gone are both fame and boasted excellence, When men of worth speak of words devoid of sense.

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.

If the good speak vain words their eminence and excellence will leave them.

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்